தமிழக ஆளுனராகிறார் ரோசையா...
தமிழகத்துக்கு புதிய கவர்னரை நியமிப்பது குறித்து மத்திய அரசு முடிவு.
தற்போதைய தமிழக கவர்னர் பர்னாலாவின் பதவிக்காலம் சென்ற ஜீலை மாதத்துடன் முடிவடைந்தது.
இவருக்கு பதிலாக புதிய கவர்னரை நியமிக்கும் யோசனையில் இருந்த மத்திய அரசு ஆலோனையில்,
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ரோசையா தமிழகத்தின் புதிய கவர்னர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டார்.
அதனை ஏற்ற மத்திய அரசு ரோசையாவை தமிழக கவர்னராக நியமிக்க முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநில காங்கிரஸின் மூத்ததலைவரான ரோசையாவுக்கு 79 வயதாகிறது.கடந்த 79 ம் ஆண்டு முதல்
ஆந்திர சட்சபையில் ஐந்து காங்கிரஸ் முதல்வர்களின் தலைமையில் மந்திரியாக இருந்துள்ளார்.
கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பணி ஆற்றியுள்ளார். ராஜசேகர ரெட்டியின் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த
இவர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் ஆந்திர முதல்வர் ஆனால், தொடர்ந்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளால்
முதல்வர் பதவியை துறந்தார். கடந்த 98ம் ஆண்டில் எம்.பி ஆகவும் இருந்துள்ளார்.
தற்போது எம்.எல்.ஏ,வாக இருந்து வரும் ரோசையா அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு
தமிழக கவர்னராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக