வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மர்மங்கள்.....

                                                     


                                                     மர்மங்கள்.....
 
     இந்தியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தமிழீழத்துக்கு எதிரானதா? என்ற கேள்வியுடன் வந்த கட்டுரை ஒன்று மிகுந்த பரபரப்புடன் பேசப்படுகிறது. அதன் முழுவடிவம்:

    
   இந்தியாவின் மர்மமான நிகழ்வுகளில் தமிழீழத்தின் விடியலுக்கு எதிரானசதிகளா அல்லது சிங்களனுக்கு எதிரான தொடக்கமா…..
கடந்த சில நாட்களாக இங்கு இந்தியாவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளை உற்று
நோக்கும் போது,சில மர்மங்கள் நெருடலை ஏற்படுத்துகிறது

1 )இந்தியாவில் மிக முக்கிய அரசியல் பிரச்சனை நடக்கும்போது அறுவை
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளாராம் சோனியா.இத்தனைக்கும்
உலகத்தரத்தில் இந்தியாவில்
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு
வருகிறார்கள் .

2 ) நாடே உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை பற்றி
ஒரு அறிக்கை கூட வெளிடாத மர்மம்.

3 ) இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி நடைபெறவிருந்த
சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் மீதான விவாதமானது,சிறிலங்காவில்
போருக்குப்பின்னால் இந்தியா செய்த உதவிகள் தொடர்பாக என்று
மாற்றப்பட்டதும் ஒரு மர்மம்.

4 ) சோனியா அறுவை சிகிச்சைக்கு என்று அமேரிக்கா சென்றவுடன் இங்கிலாந்து
நாடு ஐரோப்பிய நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளின் தடை நீக்கத்திற்கான
வழக்கில் புலிகளுக்கு எதிராக ஆஜராகியதுஒரு மர்மம்,

திறந்த இருதய அறுவை
சிகிச்சைக்கு கூட பத்துநாட்களில் வெளியே வரும் இந்த காலத்தில் ஒருமாத
காலம் தொட்டு அமெரிக்காவில் சிகிச்சை…நம்மை மடையர்களாக
ஆக்குகிறார்களோ என்ற மர்மம் எழுகிறது,ஏனென்றால் கடந்த பதினோரு ஆண்டுகளாக
கண்டுகொள்ளப்படாத பேரறிவாளன், சாந்தன்,முருகனின் கருணை மனு சோனியாஅமெரிக்கா சென்ற சமயத்தில் தானா நிராகரிக்கப்பட வேண்டும்,

…இங்கே
மூவருக்கு கருணைமனு
நிராகரிக்கப்படுகிறது அமெரிக்காவின் விமானங்கள் சிறிலங்காவின் வான்
பரப்பில் ஒத்திகைக்கு வருகிறது.

மர்மத்தின் உச்சக்கட்டமாக இந்தியாவின்
வெளியுறவுத்துறை ஆலோசகர் எம்கே நாராயணன் நேற்று தமிழீழ தமிழர்களின்
பிரச்சனையில் சிங்களனுக்கு ஆலோசனையும் சிங்கள அரசு தமிழர்களுக்கு எதுவும்
செய்யவிரும்பாது என்ற உண்மையையும் சொல்கிறார். இது மிகப்பெரிய மர்மம்…

5 ) உலகத்தின் மிக பெரிய மூன்றாவது கடற்படையும்,கடலோர படை என்ற
ஒன்றும் வலிமையாக இருந்தும் வேதாரண்யத்தில் இருந்து வேம்பார்வரைக்குமான
200 கிலோமீட்டர் கடல் எல்லைக்கு 100 படகுகளில் வெறும் 200 ஆளணிகளை கொண்டு
பாதுகாப்பு அளிக்காத மர்மம் என்ன என்றும் தெரியவில்லை.

6 ) செப்டம்பர் மாதம் கூடுகின்ற மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா என்ன
மாதிரி செயல்படபோகிறது என்ற மர்மமும் இருக்கிறது,

ஆனால் ஒன்றுமட்டும்
புரிகிறது இத்தனை மர்மத்திற்கும் ஒரு மெல்லிய தொடர்பு இருக்கிறது,

அது
இந்தியாவுக்கு இன்னும் மனசாட்சி உறுத்தவில்லை இந்தியாவின் தேசியத்தை
காங்கிரசுக்காரன் அழித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை இன்னும் இங்கே
யாரும் புரிந்துகொள்ளவில்லை,

இந்தியாவின் தமிழர் விரோத செயல்ப்பாடுகளில்
தேக்கநிலையினை பாதிக்கப்பட்ட,மற்றும் புலம்பெயர் தமிழீழமக்கள் சிறப்பாக
செய்துவிட்டார்கள்.

எதிர்வரும் செப்டம்பர் அமர்வில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில்
அமெரிக்காவும் ஜெர்மனியும் சிறிலங்காவின் போற்குற்றங்களுக்கு எதிரான
சர்வதேச நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து தீர்மானம் கொண்டுவரும் என்ற
எதிர்பார்ப்பு நிலவி வரும் நேரத்தில்,ராஜபக்சே சீனா செல்கிறான்,

சோனியா
அமெரிக்காவில் சிகிச்சை என்ற பெயரில்
சதிவலை பின்னுகிறார்,சதிவலைக்கு வலு சேர்க்க,சாந்தன்,பேரறிவாளன்,முருகன்
மீதான கருணை மனு நிராகரிப்பு,செய்தியாகிறது ,

சர்வதேசம் மீண்டும் ஒருமுறைராஜீவை உச்சரிக்கிறது,எப்போதும் போல தமிழ்நாட்டு சட்டப்பேரவையின்
தீர்மானம் கழிவரைக்காகிதமாகிப்போனாலும், தீர்மானம் நிறைவேற்றியவுடன்
சென்னை
வந்து முதலமைச்சர் ஜெயலிதாவை பார்த்துவிட்டு கொழும்பு சென்ற சிவசங்கரமேணனும் கொழும்பு சென்றுவிட்டு வந்தது தொடர்பாக எந்த ஒரு
விஷயத்தையும் வெளியில் சொல்லவில்லை

.கொலைகாரன் ராஜபக்சேவை மூக்கறுத்து
திருப்பி அனுப்ப முழு ஒத்துழைப்பு அளித்த இங்கிலாந்து நாடு,

இன்று
விடுதலைப் புலிகளின் தடை நீக்கத்திற்கு எதிராக களம்
இறங்குகிறது.

இத்தனைக்கும் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தெரியும்

புலிகளையும் தமிழீழத்து மக்களையும் பிரிக்க முடியாது என்பது

நன்றாக தெரிந்திருந்தும் இங்கிலாந்து தமிழனுக்கு எதிராக களம் இறங்குகிறது.

      சோனியா அமெரிக்காவில்,இப்போது அமெரிக்கா வான்படை சிறிலங்காவில் ஒத்திகை
பயிற்ச்சியாம்.

இப்போது எம்.கே.நாராயணனுக்கு அரசியல் விவகாரம் பற்றி
பேசவேண்டிய
தேவை வருகிறதாம்…

.ம்... உச்சந்தலையில்  அடித்தாலும்
சரி,சிங்களனுக்கு சேவகம் செய்வதை இந்தியா நிறுத்தாது,

இப்போதும்
இந்தியாவின் செயல்கள் எந்த விதத்திலாவது சிங்களனுக்கு சேவகம் செய்ய
வேண்டும் என்ற துடிப்பு மட்டும் அடங்காமல் இருக்கிறது.

இந்தியாவில் காங்கிரசு என்ற ஒரு கட்சி இருக்கும் வரைக்கும் இந்தியா
திருந்தப்போவதும் இல்லை,அதன் இறையாண்மை நீடிக்கப்போவதும் இல்லை, இங்கே
நாட்டை பற்றி யாரும் கவலை கொள்வதும் இல்லை,

உலகத்திலேயே,ஊழலுக்கு எதிராக
சட்டம் இயற்றவேண்டி உண்ணாவிரதம் இருந்து போராடும் இழி நிலையில், ஆட்சி
நடத்தும் ஒரு கட்சியிடம் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்க
முடியுமா?…

போராடுகிற ஒரு இனம் அதன் சுதந்திரத்தை அடைந்தே தீரும் ….
போராடுவோம்....
கிடைக்கின்ற தளங்கள் அனைத்தில் இருந்தும் அயராது போராடுவோம்.

நன்றி öருநடன்

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்