வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

கருணை மனு நிராகரிப்பு செப்7 ல் தூக்கு.

                                                            

                        பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு  தூக்கு.
                                மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்.

 ராஜிவ் மரணத்தில் தொர்டபுடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை செப்டம்பர் 7ம் தேதி தூக்கிலிட உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் <உள்ளனர். தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட இவர்கள் தங்கள்
மீது கருணைகாட்டக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அந்தக்கருணை மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக்கடிதத்தில் வருகிற செப்டம் மாதம் (அடுத்தமாதம் )7 ம்தேதிக்குள் மூவரையும் தூக்கிலிடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்