அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஆயுதங்களை பெறுகிறது இந்தியா....
ரூ27 ஆயிரம் கோடிக்கான போர்கருவிகளை அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெறுகிறது.
அதிநவீன நான்கு என்ஜின்கள் பொருத்தப்பட்ட சி.130 போர்விமானங்களும் அடக்கம்.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ராபர் கூறியதாவது:
இதுவரை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ராணுவ ரீதியான போர்தளவாடங்கள் அளிப்பது
குறித்த பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது ரூ27 ஆயிரம்
கோடி மதிப்பிலான தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு
அமெரிக்க ராணுவ தலைமையகம் சம்மதம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க படையில் சேர்க்கப்பட்ட விமானங்களை பிற நாடுகளுக்கு
குறுகிய காலத்துக்குள் விற்க அமெரிக்கமுன் வந்ததில்லை.
முதல் முறையாகஇந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க
விமானப்படையில் சேர்க்கப்பட்ட சி.130 என்ற அதிநவீன
போர்விமானங்களை இந்தியாவுக்கு தருகிறோம்.
இதனால் இந்தியா ராணுவத்தில் முன்னேறிய நாடாக முடியும்.
தவிர இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் அமெரிக்காவில் பயிற்சியும் பெறமுடியும்.
எம்.777 என்ற ரக பீரங்கிகளையும் அமெரிக்க தலைமையகம் இந்தியாவுக்கு விற்க இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக