மகன் உயிர் விடும் முன்பே மாய்வோம்...
தந்தை குமுறல்....
எனது மகன் உயிர்விடும் முன்பே வேலூர் சிறை முன்பு தற்கொலை செய்துகொள்வோம்
என்று தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தந்தை பேசினார்.
ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூவரையும் தூக்கிலிடக்கூடாது என வலியுறுத்தி
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில்
பெருந்திரளானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
அந்த உண்ணாவிரதத்தில் தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது: எனது மகன்
பேரறிவாளன் உயிர் விடுவதற்கு முன்பே வேலூர் சிறை வாசலில் நாங்கள் குடும்பத்துடன் உயிரை விடுவோம்.
எனது மகனின் உயிரை தமிழக முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றவேண்டும்.
செய்யாத குற்றத்துக்காக எனது மகன் 21 ஆண்டுகள் சிறையில் இருக்கிறான். அப்பாவியான
அவன் உயிரை பறிக்க நினைக்கிறார்கள். அவனது உயிர் போகும் முன்பே நாங்கள் குடும்பத்துடன் உயிரை விடுவோம் என்றார்.
இதற்கிடையே வேலூர் சிறையில் தமிழக காவல்துறையின் சிறப்பு போலிசார் கொண்ட படை
குவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் உன்னிப்பான பார்வையில் தற்போது வேலூர் சிறைச்சாலை உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக