வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 27 ஆகஸ்ட், 2011

வலுவான லோக்பால்... தீர்மானம் நிறைவேற்றம்.

                                                                         


                                வலுவான லோக்பால்... தீர்மானம்   நிறைவேற்றம்.

           அன்னாஹசாரே கொண்டுவந்த வலுவானலோக்பால் கோரிக்கை குறித்த போராட்டத்துக்கு நிறைவு

  தரும் விதமாக மக்களவையில் தீர்மானம்   நிறைவேறியது.
 
  நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிரணாப்முகர்ஜி  லோக்பால் குறித்த தீர்மானம் கொண்டு வந்தார்.

  ஹசாரேயின் முக்கிய தீர்மானங்கள் குறித்து  பரிசீலிக்கவேண்டும் என நிலைக்குழு வலியுறுத்தியது.

     மக்களவையில் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடந்தபோது உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பின்

 மூலம் தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனை  சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

   அவையில் நடந்த தீர்மானம் குறித்த விளக்கத்தினை மராட்டிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு

  அதனை அந்த மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்  விலாஷ்ராவ் தேஷ்முக் கொண்டு சேர்க்கிறார்.

   அவையில் தீர்மானம் நிறைவேறியது குறித்து அறிந்த ஹசாரே குழுவினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

       இதற்கிடையே பா.ஜ கட்சி  அன்னாஹசாரேவின் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள கேட்டுள்ளது.

        ஞாயிற்றுக்கிழமையுடன் அவரது போராட்டம் முடிவுக்கு வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்