கராட்சியில் கலவரம் 200 பேர் பலி
பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருதரப்புக்கும் எழுந்த மோதலில் 200 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த மாதத்துவக்கத்தில் பாகிஸ்தானை தற்போது ஆட்சி செய்துவரும் பாகிஸ்தான் மக்கள்
கட்சி தொண்டர்களுக்கும் முக்கிய எதிர்க்கட்சியான
முக்தாஜிதாகுவாமி தொண்டர்களுக்கும் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.
இந்தக்கலவரம் இன்னும் முடிவுக்கு வராமல் நீடிக்கிறது.
கலவரத்தில் இறந்த 19 பேருக்கு அஞ்சலி செலுத்த முக்தாஜிதாகுவாமி கட்சியினர்
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தனர். இதனை முன்னிட்டு
வர்த்தக நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை.
இருந்தபோதும் அன்றும் கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்துவரும் கலவரத்தில்
இது வரை இருநூறு பேர் கொல்லப்பட்டிருக்கலாம்
என அஞ்சப்படுகிறது. சம்பவங்கள் கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் யூசூப்ரசாகிலானி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக