வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தீக்குளிப்பு...

                                                            
                                                                    

                    அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தீக்குளிப்பு

                                             
லோக்பால் மசோதாவை அமல்படுத்தக்கோரி சமூக சேவகர் அன்னாஹசாரே

டெல்லி ராம்லீலா  மைதானத்தில் நடத்திவரும் 10 நாட்களை தொட்ட

நிலையில்...

அவரது ஆதரவாளர் ஒருவர்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

            டெல்லி ராஜ்காட்டில் உடல் முழுவதும் தீக்காயம் பட்ட நிலையில்

வாலிபர் ஒருவர்கிடந்துள்ளார். அவரை மீட்ட மக்கள் மருத்துவமனையில்

சேர்த்தனர்.சிகிச்சை பயனின்றி   அவர் இறந்தார். 

முன்னதாக அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் தினேஷ்குமார்

யாதவ்என்பதும் பீகாரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

நாடு முழுவதும் அன்னாஹசாரேவின் அனல் வீசிக்கொண்டிருக்கும்

நிலையில் தமிழகத்தில்தற்போது பிரளயமே நடப்பதுபோல் காட்சிகள்

அரங்கேறி வருகின்றன. ஒன்று அன்னாஹசாரேவுக்கானஆதரவுப்போராட்டம்,

மற்றொன்று ராஜிவ்கொலை வழக்கில் தூக்கு தண்டணைநிறைவேற்றத்துக்காக

தயாராகிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்ககோரி

நடந்துவரும் போராட்டம்.

நேற்று இவர்களுக்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டம்

நடத்தினர்.

சட்டக்கல்லூரிமாணவர்கள் ரயில் பாதையில் தலை வைத்து போராட்டம்

நடத்தினர்.

அடுத்து வேலூர் மாவட்டம்

ஜோலார்பேட்டையில் நூற்றுக்கணக்கான மக்கள் சேர்ந்து உண்ணாவிரதம்

இருந்தனர்.

 தூக்கு தண்டணை விதிக்கப்பட்டவர்களின் விஷயத்தில் தமிழக முதல்வர்

என்ன செய்யப்போகிறார்? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் தமிழகம்

மட்டும் அல்லாது  உலக நாடுகளும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்