வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 8 நவம்பர், 2013

தொகுப்பூதிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.



 ஈரோடு மாவட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய
விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
ஈரோடு மாவட்ட குழுந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழுமம் ஆகியவற்றில்   உதவியாளருடன் கலந்த கணிணி இயக்குபவர் பணியிடங்கள் தலா ஒன்று வீதம் மொத்தம் இரண்டு இடங்கள் உள்ளன.

இவற்றிற்கான தொகுப்பூதியம் ரூ ஐந்தாயிரம். இந்த இரு இடங்களுக்கும்  விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. விண்ணப்பதாரர் பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் தட்டச்சுக்கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தகுதி பெற்றிருப்பதுடன் கணிணி இயக்குவதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

நாற்பது வயதுக்கு மேற்பட்டவராக இருக்ககூடாது. விண்ணப்பங்களை ஈரோடு மாவட்ட இணையதள முகவரி  www.erode.nic.in ல்

பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணபங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நவம்பர் 27 ம்தேதி 2013மாலை 5.30 மணிக்குள்
கண்காணிப்பாளர் அரசினர் குழந்தைகள் இல்லம். கொள்ளுக்காட்டுமேடு லக்காபுரம் (அஞ்சல்) வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் ஈரோடு 638002 .   என்ற   முகவரிக்கு  வந்து சேரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்