வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 8 நவம்பர், 2013

ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுரை.



                                        
   ரோடு மாவட்டம் பெருந்துறை அருகே
நடந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வருவாய்துறை அமைச்சர் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்குள் விழா நடந்தது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார். விழாவில்46 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வருவாய்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: பெற்றோர்கள் கனவுகளோடு தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். மாணவர்கள் கல்வியினை நன்கு பயின்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இந்தப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள்  நன்கு படித்து அதிக மதிப்பெண்கள்   பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற வேண்டும்.

 மாணவர்களின் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவிகிதத்தினை அதிகரிக்க ஆசிரியர்கள் முழு முயற்சியாக செயல்பட வேண்டும். மாதம் ஒரு முறை பெற்றோர்கள் கூட்டத்தை கூட்டி மாணவ மாணவகளின் கல்விநிலையினை கூறி அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வழி வகுக்கவேண்டும்.

 அரசு வழங்கியுள்ள இந்த மடிக்கணினிகளை பயன்படுத்தி பொது அறிவினை வளர்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.





கருத்துகள் இல்லை:

பக்கங்கள்