சேலம் ஆடிடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலிஸ் பக்ரூதீன்
கொடுத்த தகவலின் பேரில் ஈரோட்டில் இரு சக்கர வாகனத்தை சி.பி.சி.ஐ.டி போலிசார் கைப்பற்றினர்.
சேலம் பா.ஜ.க பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் சென்ற சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் சேலத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க போலிஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி போலிசார் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.
கடுமையான தேடுதல் வேட்டைக்கு பின்னர் தலைமறைவாக இருந்த போலிஸ் பக்ரூதீனை அவனது கூட்டாளிகளுடன் போலிசார் கைது செய்தனர்.
பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பக்ரூதீனை நீதிமன்ற அனுமதியின் பேரில் போலிசார் தங்களது விசாரணை வளையத்தில் கொண்டுவந்தனர். பக்ரூதீனிடம் போலிசார் நடத்திய விசாரணையில் ஆடிட்டர் ரமேஷை கொலை செய்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதாகவும் அந்த வாகனம் ஈரோட்டில் இருப்பதாகவும் பக்ரூதினிடமிருந்து தகவல் கிடைத்தது.
இதன்பேரில் ஈரோடு வந்த சி.பி.சி.ஐ.டி போலிசார் ஈரோடு ரயில்வே நிலையம் அருகே உள்ள மணி சைக்கிள் ஸ்டேண்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக