ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு
தீபாவளி போனஸ் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் தம்பிரான்வலசு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாவட்ட ஆவின் பால்வள ஒன்றிய தலைவருமான பி.சி. ராமசாமி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். என். கிட்டுச்சாமி கலந்துகொண்டு 127நெசவாளர்களுக்கு போனஸ் தொகை ரூ 3.21 லட்சத்தை வழங்கினார்.
இதில் மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,பாலகிருஷ்ணன், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சந்திரசேகரன், கொடுமுடி ஒன்றியக்குழு தலைவர் தமிழ்செல்வி, மாநில விதைக்குழு உறுப்பினர் கலைமணி, மொடக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் காகம் மணி, தம்பிரான் வலசு கைத்தறி நெசவாளர் சங்க தலைவர் குகநாதன், துணைத்தலைவர் பெரியசாமி, இயக்குனர்கள் ஆறுமுகம், யுவராஜ், மேலாளர் ராமசாமி, எழுத்தர் சுப்பிரமணி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக