ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்25 ம்தேதி வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நடக்கிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் இந்தக்கூட்டத்தில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் கொடுக்கலாம்.
11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சனைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம்.
பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை முடிய அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்பட உள்ளது.
இந்தக்கூட்டத்தில் அனைத்து விவசாய பெருமக்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக