சிவகிரி அருகே கொந்தளம் கிராமத்துக்கு செல்லும் வழியில்
இருந்த ரைஸ்மில்லில் லாரி புகுந்து ரூ 2 லட்சம் சேதம்.
சிவகிரி அருகே உள்ளது கொந்தளம் கிராமம். தாமரைப்பாளையம் சிவகிரி வழித்தடத்தில் உள்ள இந்த கிராமத்தில் கிராம சாலை துவங்கும் இடத்தில் ரைஸ்மில் வைத்து நடத்தி வருபவர் மோகன்குமார்(40) சம்பவத்தன்று தாமரைப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று இவரது ரைஸ்மில் காம்பவுண்டை உடைத்துக்கொண்டு அருகில் இருந்த வீட்டில் புகுந்து நின்றது. இதில் லாரி டிரைவர் ராமநாதன் காயம் அடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ரைஸ்மில் உரிமையாளர் மோகன்குமார் கொடுமுடி போலிசாரிடம் புகார் தந்துள்ளார். புகாரில் தனக்கு ரூ2 லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதம் அடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்துக்கு காரணமான நாமக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பள்ளர் தெருவைச்சேர்ந்த லாரி டிரைவர் ராமநாதன்(28) மீது கொடுமுடி எஸ்.ஐ துரைச்சாமி வழக்கு பதிந்துள்ளார்.
---------------------------------------------------------------
இருந்த ரைஸ்மில்லில் லாரி புகுந்து ரூ 2 லட்சம் சேதம்.
சிவகிரி அருகே உள்ளது கொந்தளம் கிராமம். தாமரைப்பாளையம் சிவகிரி வழித்தடத்தில் உள்ள இந்த கிராமத்தில் கிராம சாலை துவங்கும் இடத்தில் ரைஸ்மில் வைத்து நடத்தி வருபவர் மோகன்குமார்(40) சம்பவத்தன்று தாமரைப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று இவரது ரைஸ்மில் காம்பவுண்டை உடைத்துக்கொண்டு அருகில் இருந்த வீட்டில் புகுந்து நின்றது. இதில் லாரி டிரைவர் ராமநாதன் காயம் அடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ரைஸ்மில் உரிமையாளர் மோகன்குமார் கொடுமுடி போலிசாரிடம் புகார் தந்துள்ளார். புகாரில் தனக்கு ரூ2 லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதம் அடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்துக்கு காரணமான நாமக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பள்ளர் தெருவைச்சேர்ந்த லாரி டிரைவர் ராமநாதன்(28) மீது கொடுமுடி எஸ்.ஐ துரைச்சாமி வழக்கு பதிந்துள்ளார்.
---------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக