கொடுமுடி புதிய பஸ்நிலையம் அருகே...
நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பஸ்கட்டணம் மற்றும் பால் விலை உள்ளிட்டவற்றை தமிழக அரசு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உயர்த்தியது. இதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
கொடுமுடி ஒன்றிய செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக