வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 22 நவம்பர், 2011

நன்றி...

                                                                

ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழுவின் 19வது வார்டு உறுப்பினர் தேவகிசேகர்
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டாக 19 வார்டு உள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த வார்டுக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் தேவகி சேகர்.

மொடக்குறிச்சி தொகுதி கழக இணை செயலாளராக உள்ள அமராவதிபுதூர்சேகரின் மனைவியான இவர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று நன்றி தெரிவித்து வருகிறார். கொடுமுடி யூனியனில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் நன்றி தெரிவித்தார்.

அவருடன்  மொடக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க  இணை செயலாளர் அமராவதிபுதூர் சேகர் மற்றும் கொடுமுடி ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பழனிசாமி, அய்யம்பாளையம் ஊராட்சி தலைவர் குப்புச்சாமி ஆகியோர் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்