வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

கோயில் கும்பாபிஸேக விழா.



ஈரோடு மாவட்டம்
சிவகிரி அருகே உள்ள மோளபாளயத்தில் செல்வவிநாயகர் கோயில் உள்ளது. இந்தக்கோயிலின் கும்பாபிஸேக விழா இன்று காலை 7.15 மணிக்கு நடந்தது.

விழாவில் முன்னதாக மங்கள இசை முழங்க வாஸ்துபூஜை,
 வேதிகாபூஜைகளுடன் முதல்கால, இரண்டாம்கால யாகபூஜைகள் நடந்தன. இவற்றின் நிறைவில்  ராஜபாலசந்திரகணபதி சிவாச்சாரியர் சர்வசாதகத்தில் சென்னிமலை சபாபதி ஆலாலய சந்தரபண்டித குருசுவாமிகள் , செல்வவிநாயகர் கோயில் கோபுர கலசத்திற்கு மகாஅபிஸேகத்தை நடத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் மோளபாளையம் நால்ரோட்டைச்சேர்ந்த ஊர்பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

கும்பாபிஸேக நிகழ்வை ஒளிப்பதிவில் பார்க்க 
இங்கே சொடுக்கவும்.  
         


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்