“ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நடந்த விஷயங்கள் அனைத்தும்
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தெரியும்”
என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார்.
டில்லியில்
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனைத்தும் கருணாநிதிக்கு
தெரியும்.
எங்களிடம் போதிய ஆதாரம் உள்ளது.
கனிமொழி மற்றும் போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் ஆகிய இருவர் இடையே நடந்த உரையாடல் டேப்
எங்களிடம் உள்ளது.
இந்தப் பேச்சு 2010 நவம்பர் மற்றும் 2011 பிப்ரவரி மாதம் நடந்துள்ளது. யார் இந்த டேப்பை வெளியிட்டார் என்பதை நாங்கள் சொல்ல மாட்டோம்.
இதில் பதிவான
குரல் சம்பந்தப்பட்டவர்களுடையதுதானா என பலமுறை சோதிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கருணாநிதியின்
பி.ஏ., சண்முகநாதன், கனிமொழி, கலைஞர் டி.வி., எம்.டி. சரத்குமார் ஆகியவர்களிடம் பல முறை உரையாடல் நடந்துள்ளது
சண்முகநாதன் 2010 டிசம்பர் 31-ம் தேதி போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிலரிடம் பேசிய விவகாரத்திற்கும் எங்களிடம் ஆதாரம் உள்ளது..
கலைஞர் டி.வி.யில்
20 சதவீதம் கனிமொழி, 60 சதவீம் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள்
ஆகியோருக்குப் பங்கு உண்டு.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெறப்பட்ட கடன் தொகையில் மாற்று ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கருணாநிதியாக இருந்தாலும், டாடாவாக இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்றார்.
அவற்றை கேட்க இங்கு சொடுக்கவும
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக