வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 6 பிப்ரவரி, 2014

ஈரோடு அருகே ரூ1.53 கோடியில் ஊரக பேருந்துநிலையம்



 ஈரோடு அருகே ரூ1.53 கோடியில் புதிய ஊரக பேருந்து நிலையம் அமைகிறது.

ஈரோடு அருகே உள்ள 46 புதூர் ஊராட்சியில் ரூ1.53 கோடி மதிப்பில் புதிய ஊரக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

1.48 ஹெக்டர் பரப்பளவில் அமைகிற இந்த பேருந்துநிலையத்தில் ஐந்து பேருந்துகள் நிற்பதற்கான  மேடைகளும், 12 கடைகளும், 2 அலுவலகங்கள் மற்றும் நடத்துநர், ஓட்டுநர்களுக்கான ஓய்வறை, பேருந்துநிலையத்தின் முகப்பு மற்றும் பின்புறம் வளைவுகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொதுக்கழிப்பிடம் ஆகியவை அமைக்கப்படுகின்றன.

இதற்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., ஆர்.என். கிட்டுச்சாமி பூஜையை துவக்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்