இந்தியா ஒரிசாவில் மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
இரண்டு நாட்களுக்கு முன்னர்
ஒரிசாவில் உள்ள சண்டிபூர் ஏவுதளத்தில் இருந்து 750 கி.மீ தொலைவு
வரை சென்று தாக்கும் சௌர்யா என்ற
ஏவுகணையை இரண்டாவது முறையாக இந்தியா பரிசோதித்தது.
இந்த நிலையில் இன்று செப்26 ம் தேதி காலை 8.50 மணி
அளவில் நடமாடும் ஏவுதளத்தில் இருந்து குறுகிய தொலைவு சென்று தாக்கும்
பிருத்திவி 2 ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.
350 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட
இந்த ஏவுகணை தரையிலிருந்து தரை இலக்கையும் எளிதில் தாக்கும் படியாக
வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக