வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 8 நவம்பர், 2011

விருந்தினர் மாளிகையில்...

                                                            
        ஈரோடு மாவட்டம்
      கொடுமுடியில் உள்ள விருந்தினர் மாளிகை
யில் விரும்பத்தகாத சம்பவங்கள் இரவுகளில் அரங்கேறிவருவதாகவும் இதனால் அந்தப்பகுதி மக்கள் சங்கடத்துக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

கொடுமுடியில்  சுல்தான்பேட்டையில் உள்ளது அரசு விருந்தினர் மாளிகை.  நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள இந்த மாளிகையின் எதிரில் புகழ்பெற்ற நடிகை கே.பி.எஸ். சுந்தராம்பாளின் இல்லம், மற்றும் தனியார் பள்ளிகள், வருவாய் அலுவலர் அலுவலகம், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம், யூனியன் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் , அரசு மருத்துவமனை உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன.

  அரசு விருந்தினர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில்  இரவு ராணிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், அதனால் அந்தப்பகுதியில்  உள்ள மக்களின் அமைதி கெட்டுவருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

நிலை விபரீதம் ஆகும் முன்னர் விழித்துக்கொள்வார்களா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்