வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 28 அக்டோபர், 2013

குழந்தைக்கு வந்த குணப்படுத்த முடியாத நோய் தற்கொலை செய்துகொண்ட தம்பதி

.

 ஈரோடு அருகே குழந்தைக்கு வந்த தீராத வியாதியால் விரக்தியடைந்த கணவன் மனைவி தற்கொலை
செய்துகொண்டனர்.

ஈரோடு அருகே உள்ள 46 புதூர் மூலப்பாளையம் ஈ.பி நகரைச்சேர்ந்தவர்  பாலசுப்பிரமணியம்(46) இவரது மனைவி சண்முகவடிவு(35) பாலசுப்பிரமணியம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் துணை பொறியாளராக  பணியாற்றி வந்தார்.

இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 17 ஆண்டுகளாக குழந்தை இல்லை.17 வருடங்களுக்கு பிறகு வருண் என்ற ஆண்குழந்தை பிறந்துள்ளது. தற்போது மூன்று வயதாகும் வருணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

வருணை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை பயனளிக்கவில்லை. வருணின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இது குறித்து  கருத்து தெரிவித்த மருத்துவர்கள் வருணுக்கு மூளை புற்று நோய் ஏற்பட்டுள்ளது என்றும் அதனை  குணப்படுத்தமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியமும் அவரது மனைவி சண்முகவடிவும் நேற்று வெண்டிபாளையம் என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு எலிகளை கொல்ல பயன்படுத்தபடும் செல்பாஸ் மாத்திரையை தின்று விட்டு காளிங்கராயன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
அவர்களது உடலை மொடக்குறிச்சி போலிஸார் தேடிவருகின்றனர்.

தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது  குறித்து அறிந்த ஈ.பி நகர் காலனி மக்கள் மிகுந்த துயரத்தில்  மூழ்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்