வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 29 அக்டோபர், 2013

குண்டுவெடிப்பை கண்டித்து பா.ஜ ஆர்ப்பாட்டம்.

                                                                                               
பாட்னாவில் நடந்த குண்டு வெடிப்பை கண்டித்து ஈரோட்டில்
பா.ஜ. கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திமோடியின் கூட்டத்தில் குண்டு வெடித்தது. இதேபோல ஈரோடு திண்டல் அருகே உள்ள முக்கிய சாலையில் தமிழக பா.ஜ க தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் சென்ற பாதை அருகே பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவங்களை கண்டித்து ஈரோடு மாவட்ட பா.ஜ கவினர் காளைமாடு சிலை அருகே உள்ள நீல்கிரிஸ் கலையரங்கம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலிஸ் அனுமதி பெறாமல் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  ஈரோடு மாவட்ட தலைவர் பொன்ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்.
 கோட்டபொறுப்பாளர் வைரவேல், மாவட்ட பொதுசெயலாளர் கௌரிசங்கர், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பழனிச்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்,   மாவட்ட தொழிலணி தலைவர் திருவேங்கடம் ரமேஷ்குமார், மாவட்ட பொது செயலாள் குணசேகர், மாவட்ட துணை தலைவர் காந்தி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அவர்களை ஈரோடு போலிசார் கைது செய்தனர்.




கருத்துகள் இல்லை:

பக்கங்கள்