வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 15 அக்டோபர், 2013

நவராத்திரி விழா

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ளது பொன்காளியம்மன்கோவில்.
கொங்குவேளாளக்கவுண்டர்களின் விளையன்குல, கூரைகுல மக்களின் குல தெய்வமாக வழிபடப்பட்டுவரும் இந்தக்கோவிலில் விளையன்குல மக்களின் சார்பில் அந்தக்குலத்தின் செயலாளர் நல்லசாமி தலைமையில் கடந்த 5 ம்தேதி முதல் நவராத்திரி விழா நடந்தது.


விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஸேக ஆராதனைகளும், விஷேச அலங்காரமும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்தும் தினந்தோறும் அம்மன் தரிசனத்துக்காக வந்து சென்றனர்.


விழாவின்9வது நாளான  ஞாயிற்றுக்கிழமையன்று விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு அபிஸேகமும், மாலை 6 மணிக்கு அம்மன் புறப்பாடும் நடைபெற்றது.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்