வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 23 செப்டம்பர், 2013

விமானப்படை வீரர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாம்.

                                      



    இந்திய விமானப்படைக்காக வருகிற அக்டோபர் மாதம் 18 ம்தேதி முதல் 22 ம்தேதி வரை
இராமநாதபுரத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 இதற்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வாசவி கல்லூரில் செப்டம்பர் 27 ம்தேதி நடைபெறுகிறது.

இந்த முகாமில்  ஆண் மனுதாரர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். அப்படி கலந்துகொள்பவர்களுக்கு வயது 17 முதல் 21 க்குள் இருக்க வேண்டும். பிளஸ்டூ அல்லது அதற்கான இணையான கல்வித்தகுதியாக கணிதம், இயற்பியல், பாடங்களில் மொத்தம் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். அல்லது  ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்கிக்கில் மூன்றாண்டு பொறியியல் பட்டயபடிப்பு மெக்கானிக்கல், எலக்கட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி இவற்றில் ஒரு பாடத்தில் ஐம்பது மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

பயிற்சி முகாமை இந்திய விமானப்படை அதிகாரிகள் நடத்துகின்றனர். முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த முகாமில் தகுதியுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் அறிவித்துள்ளார்.




கருத்துகள் இல்லை:

பக்கங்கள்