வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

மருத்துவ காப்பீட்டுதாரர்களுக்கான புகைப்படும் எடுக்கும் பணி






                                                        
விடுபட்ட மருத்துவ காப்பீட்டுதாரர்களுக்கான புகைப்படும் எடுக்கும் பணி. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


 ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் உறுப்பினராக சேர்வதற்கு புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டுத்திட்டத்தில்  சேராத விடுபட்டவர்கள் ஆண்டுவருமானம் ரூ72 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானம் குறித்த சான்று பெற்றுக்கொண்டு, அசல் குடும்ப அட்டையுடன் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பார்வையாளர்கள் கூடத்தில் செயல்பட்டுவரும்வரும் புகைப்பட மையத்தில் புகைப்படம் எடுத்து காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்