வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 7 செப்டம்பர், 2013

செப்13ல் ஈரோட்டில் வேலை வாய்ப்பு முகாம். அலுவலர் தகவல்



  ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மற்றும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்13 தேதி நடைபெறுகிறது
என மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு வேலை வாய்ப்பு அலுவலகம் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 13ம் தேதி அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி, ஆசிரியர்,ஐ.டி.ஐ பிட்டர். டர்னர், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட அனைத்து பிரிவுகள், இலகு ரக வாகன ஓட்டுநர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் மற்றும் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.

தனியார் துறையில் இம்முகாம் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுவதால் தங்களது வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்துசெய்யப்பட மாட்டாது. எனவே ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் வேலையளிப்போர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்   தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்