தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் ஈரோடு
மண்டலத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட
உள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாளை அக்டோபர் 17 ம்தேதி முதல் 27 ம்தேதி முதல் ஈரோடு மண்டல அரசு
போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் ஈரோட்டிலிருந்து கோவை, திருச்சி,
சேலம், மதுரை, சென்னை, நாமக்கல், ராசிபுரம், திருப்பூர், சத்தி, பழனி, கரூர்,
திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட
உள்ளதாகவும், மேலும் கோபி, சத்தி, பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய
ஊர்களிலிருந்து கோவை, ஈரோடு ஆகிய ஊர்களுக்கு 24 மணி நேரமும் சிறப்பு
பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக