வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 11 ஆகஸ்ட், 2012

மகாயாகம்

சிவகிரி அருள்மிகு பழனியாண்டவர் கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு
வர்ணஜப மகாயாகம் நடந்தது.

சிவகிரி சின்னியம்பாளையத்தில்  பழனியாண்டவர் கோயில் உள்ளது.

 இந்தக்கோயிலில் 9வது ஆண்டு கிருத்திகை திருவிழா நடந்தது.

விழாவில்  விநாயகர் வழிபாடு, புண்யாகம் மற்றும் மழைபொழிந்திடவேண்டி வர்ணஜபமும், காரியசித்தி, இடர்பாடுகள், சத்ரு உபாதை நிவர்த்தி,
திருமணத்தடை நீக்கம், செல்வம்பெருக, வியாபார அபிவிருத்தி உள்ளிட்ட நன்மைகள் வேண்டி வாஞ்சகல்ப விநாயக யாகம், சத்ருசம்ஹார யாகம், வரலட்சுமி மகாயாகம், சுதர்சன சக்ர மகாயாகம், திரசதா அர்சனை ஆகியவை நடைபெற்றன.


யாகங்களுக்கு  பழனியாண்டவர் கோயில் அர்ச்சகர் விஜய் ஆனந்தசிவம் தலைமை வகித்தார். விழா ஏற்பாடுகளை செம்பன் குல கொங்கு
வேளாளக்கவுண்டர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்