வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 30 ஜனவரி, 2014

அஞ்சலி.



ஈரோடு கொங்கு கலையரங்கில் ஈரோடு மக்கள் சிந்தனைப்பேரவையின் சார்பில்
மறைந்த வேளாண் அறிஞர் நம்மாழ்வாக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மக்கள் சிந்தனைப்பேரவையின் தலைவர் ஸ்டாலின்குணசேகர் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நம்மாழ்வாரின் உருவப்படத்தை  நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் சேர்ந்து திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் இயற்கையை காப்போம் நம்மாழ்வார் வழிநடப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் ஈரோட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த  புத்தகத்திருவிழாவில் நம்மாழ்வார் பங்கேற்று உரைநிகழ்த்திய வீடியோ காட்சி திரையிடப்பட்டது.
பின்னர் நம்மாழ்வாரின் நினைவாக கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நம்மாழ்வார் மரகன்று இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஈரோடு மக்கள் சிந்தனைப்பேரவையினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்