வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மொடக்குறிச்சி தொகுதியில்உண்ணாவிரதம்



            மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டணையைக்கண்டித்து


          ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய ஊர்களில் அ.தி.மு.க தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

         கொடுமுடியில் நடந்த உண்ணாவிரதத்துக்கு ஒன்றிய செயலாளர் கலைமணி தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.சி. ராமசாமி முன்னிலை வகித்தார்.

         இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டனர். இதே போல மொடக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே நடந்த உண்ணாவிரதத்துக்கு ஒன்றிய செயலாளர் காகம் மணி தலைமை வகித்தார். இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்