வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 3 டிசம்பர், 2013

உலக தகுதி....

                                     
                 
 தேசிய அளவில் நடந்த யோகா போட்டியில்
ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர் இரண்டாம் இடம் பெற்று உலக அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியைச்சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் சிவகிரி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலரான இவரது மகன் காமராஜ் கோவை ராமகிருஷ்ணா மிஷன் நடத்தும் விவேகானந்தா  பல்கலைகழகத்தில் உடற்கல்வி பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த மாதம் கோவை பேரூரில்உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் நடந்த மாநில அளவிலான யோகாசன போட்டி நடந்தது.

இதில் காமராஜ் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்தார்.

இதன் விளைவாக தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.  டெல்லியில் உள்ள மார்க்கண்டேயா ஹாலில் தேசிய அளவிலான யோகா போட்டி நடந்தது.

இந்தப்போட்டியில் காமராஜ் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து வருகிற மேமாதம்  மலேசியாவில் நடைபெறவுள்ள உலக அளவிலான யோகா போட்டியில் பங்கு கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

இவரை இவரது பெற்றோர் மற்றும்  கல்வி நிறுவன பணியாளர்கள், பாராட்டினர்.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்