ஆளுங்கட்சியைசேர்ந்த இரு அமைச்சர்களுக்கு தொலைக்காட்சி நிர்வாகியாக
நியமிக்கப்பட்டவரால் பிரச்சனை வரலாம் என பரபரப்பு சென்னையில்
நிலவுகிறது.
ஜெயா டிவியின் முன்னாள் நிர்வாகியும் சசிகலாவின் உறவினருமான
அனுராதா, சசிகலா கட்சியிலிருந்தும் கார்டனிலிருந்தும்
வெளியேற்றப்பட்டபோது அவருடன் வெளியேற்றப்பட்டார்.
அதற்கு பின்னர் டி.வி யை நிர்வகிக்கும் பொறுப்பு மாற்றப்பட்டது. இந்த
மாற்றலினால் தொய்வு ஏற்பட்டதாகவும் அந்த தொய்வை சரி செய்ய மீண்டும்
கார்டனுக்குள் வந்திருக்கும் சசிகலாவையே ஜெயலலிதா நியமித்துள்ளார்
எனவும் பேசப்படுகிறது.
இந்த பேச்சினால் ஆளுங்கட்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் கவலை
அடைந்துள்ளதாக, தலைமை கழகத்தினை நிர்வகிக்கும் நிர்வாகி ஒருவர்
சொல்லிவருவதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக